இம்முறை நடைபெறும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் புதிய தேர்தல் நடைமுறைக்கமைவாக இடம்பெறுகின்றது.
இதன் காரணமாக தபால் மூலமான வாக்களிப்புக்கள் குறித்த பெறுபேறுகள் தனியாக வெளியிடப்படமாட்டாது என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்தார்.
இதற்கமைவாக வாக்களிப்பு மத்திய நிலையம் அல்லது அதனுடன் தொடர்புபட்ட பிரதேசத்தில் முதன்மையாக கொண்ட இடத்தை காண வாக்களிப்பு மத்திய நிலையத்தில் தபால் மூல வாக்குகள் எண்ணப்படும்.
இதன்போது அந்த தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பெறுபேறுக்கு அமைவாக தகால் மூல வாக்குகள் ஒன்றுசேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார் . அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு இன்று ஆரம்பமாகின்றது.
இலங்கை பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறும்.இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றோரின் எண்ணிக்கை சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment