பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு இன்று முதல் ஜனவரி 7 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் நடைபெறவுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையில் விசேட ரயில் சேவைகளை இன்று முதல் இடம்பெறுகின்றது.
இதற்கமைவாக இன்றுமுதல் 24 , 26 மற்றும் 28 ஆம் திகதிகளிலும் ஜனவரி மாதம் 2 , 4 மற்றும் 6 ஆம் திகதிகளிலும் காலை 7.03 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் மாலை 5.39க்கு பதுளையை சென்றடையும்.
இதேபோன்று 23, 25, 27 மற்றும் 29 ஆம் திகதிகளிலும் ஜனவரி 3 , 5 , 7 ஆம் திகதிகளில் காலை 7.15 க்கு பதுளையில் இருந்து புறப்படும் ரயில் மாலை 6.12 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
இந்த விசேட ரயில் காட்சி ரயில் பெட்டி இரண்டு 2 டாம் வகுப்பு ரயில் பெட்டிகளையும் இரண்டு 3 டாம் ரயில் பெட்டிகளையும் கொண்டு இருக்கும்a
No comments:
Post a Comment