விசேட தாதியர் பீட கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன் நிர்மாண வேலைகளுக்கு 8 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் திட்டமிடப்பட்டுள்ளது.
தரம் மிக்க சிறந்த தாதியர்களை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். திறமையான பயிற்சி பெற்ற பல தாதியர்களை சுகாதார சேவையில் இணைத்துக் கொள்வதன் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை ஆற்ற முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாதியர் பீடம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட உள்ளது. இதில் சுமார் இரண்டாயிரம் தாதியர் பயிற்சி பெறக்கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளது.
No comments:
Post a Comment