பெல்வத்த சீனித் தொழிற்சாலைக்கு அருகாமையில் கரும்பு உற்பத்தி நிலங்களில் நீர்ப்பாசனத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் கீழ் கரும்பு உற்பத்தி நிலங்களில், உற்பத்தியை அதிகரித்து சீனி தயாரிப்பை அதிகரிப்பததே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன் கீழ் 13 குளங்கள், சேதமடைந்த ஓடைகளை சீர்செய்யப்படவுள்ளன. புதிய ஓடைகளும் தடாகங்களும், குழாய்க் கிணறுகளும் அமைக்கப்பட உள்ளன. நீர்த் தட்டுப்பாடு காரணமாக மழை நீரில் உற்பத்தி செய்யக்கூடிய கரும்பு உற்பத்தி நிலங்களில் கரும்பு அறுவடைகுறைந்ததால் அரசாங்கம்இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நாட்டிற்குத் தேவையான மொத்த சீனியின் தேவையில் 10 சதவீதமே பெல்வத்த சீனித் தொழிற்சாலையில் இருந்து பெறப்படுகிள்றமை குறிப்பிடத்தக்கது.




No comments:
Post a Comment