தென் ஆபிரிக்க ரயில் விபத்தில் 18 பேர் பலி!!! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 6 January 2018

தென் ஆபிரிக்க ரயில் விபத்தில் 18 பேர் பலி!!!

தென் ஆபிரிக்காவில் நேற்று போர்ட் எலிசபெத்திலிருந்து ஜொகன்னஸ்பேர்க் சென்று கொண்டிருந்த ரயிலுடன்  ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 268 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Image result for தென் ஆபிரிக்க ரயில் விபத்தில் 18 பேர் பலி!!!
ரயிலுடன் ட்ரக் வண்டி மோதியதில் ரயில் தீப்பற்றி எரிந்த நிலையில் பெருமளவானோர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அம் மாநில சுகாதாரத் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவத்துள்ளார்.றித்த ட்ரக்கானது போக்குவரத்து சமிக்ஞையை மீறி கடக்க முற்பட்ட போதே 700 பயணிகளுடன் பயணித்த ரயில் மோதியதுடன் ரயில் கடவையிலிருந்து விலகி தடம்புரண்டு தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகின்றது.
விபத்தில் ரயிலில் முதலிரு பெட்டிகளில் பயணித்தவர்களே பெருமளவில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages