2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 15 January 2018

2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னார் எருக்கலம்பிட்டி பஸ் தரிப்பிட நிலையத்தில் வைத்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் வெள்ளிக்கிழமை இரவு அநுராதபுரம் தமுத்தே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Image result for 2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு    பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நவரத்தின விற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர்  சிரந்த பீரிஸ் , உதவி பொலிஸ் அத்தியட்சகர் எதிரிசிங்க ஆகியோரின் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட  போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் மன்னார் எருக்கலம்பிட்டி பஸ் தரிப்பிட நிலையத்தில் வைத்து  குறித்த கேரள கஞ்சா பொதியை கைப்பற்றியதோடு,  அநுராதபுரம் தமுத்தே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.  
2 கிலோ 55 கிராம் எடை கொண்ட குறித்த கஞ்சாப்பொதி சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரில் இருந்து   அநுராதபுரம் தலாவ என்னும் பிரதேசத்திற்கு கொண்டு செல்ல இருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
விசாரணைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages