ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை மாலை கடவத்தையில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமை வகிக்கவுள்ளாதாக கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.
Labels
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இன்னும் 36 நாட்களில் நடைபெறவுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலூடாக ஆட்சியைக் கவிழ்க்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலூடாக ஆட்சியை கவிழ்க்க முடியும் என நாம் குறிப்பிடுகிறோம்.
எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்து உள்ளூர் அதிகார சபைகளின் அதிகாரத்தை எம்மிடம் வழங்குங்கள். அதன் பின்னர் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டு காலப்பகுதியில் அரசாங்கத்தை மாற்றும் வழியை நாம் காட்டித் தருவோம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் முறையற்ற ஆட்சியினால் பாதாளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நாட்டை மீட்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்க ளித்து வெற்றிபெறச்செய்யுமாறும் அவர் மேலும் வேண் டிக் கொண்டார்.
No comments:
Post a Comment