இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் கொழும்பை வந்தடைந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று வந்துள்ள இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இன்று மாலை ஜனாதிபதி செயலக வளவில் இராணுவ மரியாதை இடம்பெறவுள்ளது.
இதனை தொடர்ந்து இலங்கை மற்றும் இந்தோனேசிய அரச தலைவர்களுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பொருளாதாரம் வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. நாளை இந்தேனேசிய ஜனாதிபதிக்கு பிரதமர் பகல்போசனம் வழங்கவுள்ளார்.
No comments:
Post a Comment