இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் வடமாகாணத்தில் இடம்பெற்றுள்ள அபிவிருத்தி தொடர்பில் திருப்தி தெரிவித்துள்ளனர்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரோயை சந்தித்து இக்குழுவினர் கலந்துரையாடினர். நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது இக் குழுவினர் இவ்வாறு வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் திருப்தியை தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்த்தனவின் தலைமையில் இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற சர்வகட்சி உறுப்பினர் குழுவில் Michelle Donelan, Chris Green, John Lamont ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆளுநர் உடனான கலந்துரையாடலின்போது நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க நிகழ்ச்சி நிரல் மற்றும் திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நான்குபேரைக்கொண்ட இக்குழு கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment