பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் , ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோவுக்குமிடையிலான பேச்சுவார்த்தை அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த பேச்சுவார்;த்தையின் போது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார, அரசியல் உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்துசமுத்திரத்தில் பொருளாதாரத்தின் கேந்திர மையமாக அபிவிருத்தியடைவதற்கு இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிக்கு ஜப்பான் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, திருகோணமலை துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல், கண்டி நகரத்தை விரிவாக்குதல், மத்திய அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க விமான ஓடுபாதை விஸ்தரிப்பு ஆகிய பணிகளின் போது ஜப்பானின் அனுபவங்களும் முதலீட்டு உதவியும் இலங்கைக்கு முக்கியமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தச் சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment