ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ் புரா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். சிறிய ரக மோட்டார் குண்டுகளையும் அவர்கள் தாக்குதலில் பயன்படுத்தினர்.
இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்ட போதிலும், பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உயிர் தியாகம் செய்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் எல்லையோரம் உள்ள கிராமப்புரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எல்லையோரம் நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட வில்லை.
No comments:
Post a Comment