அர­சியல் சர்ச்­சைகள், நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் இன்று கூடு­கி­றது பாரா­ளு­மன்றம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 10 January 2018

அர­சியல் சர்ச்­சைகள், நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் இன்று கூடு­கி­றது பாரா­ளு­மன்றம்

Related image
பல்­வேறு அர­சியல் சர்ச்­சைகள், கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான   கருத்து முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் இன்­றைய தினம்   விசேட பாரா­ளு­மன்ற அமர்வு  சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் இடம்­பெ­று­கின்­றது. 

இந்த விசேட அமர்வில் கலந்­து­கொள்­ளு­மாறு அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வினால் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.  
மத்­திய வங்கி பிணை­முறி  மோசடி தொடர்­பாக விசா­ரித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை   ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது­தொ­டர்பில் விவாதம்  நடத்­து­வது குறித்து தீர்­மா­னிக்கும்   நோக்­கி­லேயே இன்று பாரா­ளு­மன்றம் கூடு­கி­றது.  
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்பில்   கடந்த மூன்றாம் திகதி தனது நிலைப்­பாட்டை தெரி­வித்­தி­ருந்தார்.   ஜனா­தி­ப­தியின்  நிலைப்­பாடு அறி­விக்­கப்­பட்­ட­தை­தொ­டர்ந்து நாட்டின் பிர­தான அர­சியல் கட்­சிகள்  பாரா­ளு­மன்றம் உட­ன­டி­யாக கூட்­டப்­ப­ட­வேண்­டு­மென   கோரிக்கை விடுத்­தனர். 
பாரா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யாக கூட்­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும்   தெரி­வித்­த­துடன் அது­தொ­டர்பில் சபா­நா­ய­க­ரிடம் கோரிக்­கையும் விடுத்­தி­ருந்தார். அந்­த­வ­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற  நிலை­யியல் கட்­ட­ளையில்  14 ஆம் இலக்க ஏற்­பா­டு­களின் கீழ்   பாரா­ளு­மன்றம் இன்­றயை தினம் கூடு­கி­றது.  
இன்­றைய தினம்  சபையில்   மத்­தி­ய­வங்கி பிணை­முறி  மோசடி தொடர்­பான பர­ப­ரப்­பான விவா­தத்தை நடத்­து­வ­தற்­கான   ஏற்­பா­டுகள் குறித்து ஆரா­யப்­படும்.   குறிப்­பாக   ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின்  அறிக்கை தொடர்­பிலும் அது தொடர்­பான  ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடு குறித்தும்   அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் இன்­றைய தினம்  உரை­யாற்­ற­வுள்­ளனர்.  
 இதன்­போது எதிர்க்­கட்சி,  மற்றும் ஆளும் கட்­சிக்­கி­டையே கடும் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெறும் என  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில்   அது தொடர்­பாக  அர­சியல் கட்­சிகள் தமது நிலைப்­பா­டு­களை அறி­விக்­க­வுள்­ளன. 
 குறிப்­பாக  இன்­றைய தினம் சபை அமர்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முக்­கிய உரை­யொன்றை நிகழ்த்­துவார் என  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  
பிணை­முறி மோசடி தொடர்பில் விசா­ரித்த  ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கையில்    முன்னாள் நிதி அமைச்சர் , முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர், மற்றும் பேப்பச்சுவல் ட்ரரிஸ் நிறுவனத்தின்  அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென  பரிந்துரை செய்துள்ளதாக  ஜனாதிபதி கடந்த மூன்றாம் திகதி   அறிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages