ரயில்வே திணைக்களம் அடுத்தவருடத்தில் வினைத்துறனுடன் செயற்பட நடவடிக்கை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 26 December 2017

ரயில்வே திணைக்களம் அடுத்தவருடத்தில் வினைத்துறனுடன் செயற்பட நடவடிக்கை

ரயில்வே திணைக்களம் அடுத்தவருடத்தில் வினைத்துறனுடன் செயற்பட நடவடிக்கை
ரயில்வே திணைக்களத்தின் சேவை அடுத்த வருடம் மேலும் வினைத்திறனாக்கப்படும் என்று ரயில் பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அண்மையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய ரயில் சேவையில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அடுத்த வருடத்தில் தீர்வு கிடைக்கலாம் என்று பொது முகாமையாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பிலான பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பமாகும். தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்படுவார்கள்.


அடுத்த வருடம் புதிதாக என்ஜின்களையும் ரயில் பெட்டிகளையும் கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் பொது முகாமையாளர் இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages