எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர், பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தி தலைமை தாங்குகிறார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்நிலையில், இன்று மாலை, பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர், பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், சோனியா காந்தி இக்கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். ராகுல் காந்தியும் கலந்து கொள்கிறார்.
தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து வருவதில், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
முத்தலாக் மசோதா, நீதிபதிகள் மோதல், உ.பி. வகுப்பு கலவரம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி மத்திய அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க வியூகம் வகுப்பது பற்றி இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment