காலநிலை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 5 February 2018

காலநிலை

காலநிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரையோர பிரதேசங்களில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக காற்றுவீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages