புத்தாண்டு பிறப்பையொட்டி மெட்ரோ ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12.30 மணி வரை இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன பொதுமக்கள் தொடர்பு துறை இணை-இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
சென்னை:
புத்தாண்டு பிறப்பையொட்டி பொதுமக்கள் வழிப்பாட்டு தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வார்கள்.
இதனால் பொதுமக்களின் நலன் கருதி வழக்கமாக இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12.30 மணி வரை இயக்கப்படும். இந்த வாய்ப்பை அனைவரும் முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன பொதுமக்கள் தொடர்பு துறை இணை-இயக்குனர் எஸ்.பாண்டியன் தெரிவித்து உள்ளார்.



No comments:
Post a Comment