நாட்டில் 1,80,988 டெங்கு நோயா­ளர்கள் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 25 December 2017

நாட்டில் 1,80,988 டெங்கு நோயா­ளர்கள்

Related image
இலங்­கையில் இந்த   ஆண்டு ஜன­வரி மாதம்  தொடக்கம் தற்­போது வரை­யான காலப்­ப­கு­தியில் 180,988 டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக இலங்கை தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது. 
Image result for டெங்கு நோயா­ளர்கள்
இவ்­வ­றிக்­கையின்படி சுமார் நூற்­றுக்கு 41.57 வீத­மான டெங்கு நோய் தாக்கம்   மேல் மாகா­ணத்­தி­லேயே பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  
இவ்­வ­றிக்­கையில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,
கொழும்பு மாவட்­டத்­தி­லேயே அதி­க­ள­வான டெங்கு நோயா­ளர்கள் இனம் காணப்­பட்­டுள்­ளனர். இம் மாவட்­டத்தில் சுமார் 33,660 டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இதேவேளை கம்­பஹா மாவட்­டத்தில் 31,095 நோயா­ளர்­களும், களுத்­துறை மாவட்­டத்தில் 10,497 நோயா­ளர்­களும், கண்டி மாவட்­டத்தில் 14,099 நோயா­ளர்­களும் இனங்காணப்பட்டுள்ளனர். ஏனைய மாவட்­டங்­களில் சரா­ச­ரி­யாக 500 தொடக்கம் 3000 நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.
இலங்­கையில் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்ள இந்­நி­லை­மை­யா­னது நுளம்­புகள் பரவும் வகை­யி­லான சூழலை ஏற்­ப­டுத்­தா­தி­ருத்தல் வேண்டும் என்­பதைச் சுட்­டிக்­காட்­டு­வ­தோடு இந் நோய் நிலை­மையில் இருந்து பாது­காப்­பாக இருக்க வேண்டும் என்­ப­தையும் உணர்த்­து­கின்­றது. 
மேலும் டெங்கு நோய்க்­கான அறி­கு­றிகள் பற்­றிய தெளி­வினை மக்கள் பெற்­றி­ருப்­ப­தோடு நோய் நிலைமை வராமல் தடுப்­ப­தற்கு முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் நடந்துகொள்ளவேண்டும். அதேவேளை நோய் ஏற்படும்
சந்தர்ப்பத்தில் அதனை குணப்படுத்துவதற் காக உரிய முறையில் சிகிச்சைகளை பெற வேண்டியதும் அவசியமாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages