248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு… - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 21 December 2017

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு…

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு…
248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று(21) நண்பகலுடன் நிறைவடையவுள்ளன. கடந்த 18ம் திகதி இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான இன்று(21) மாவட்ட செயலகங்களில் விஷேட பாதுகாப்பு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், 15,000 பொலிஸார் வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதன்போது பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை முன்னெடுக்கவும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages