துபாய்: துபாயில் நடந்த உள்ளூர் டி10 கிரிக்கெட் போட்டியில், சேவக்கின் அரேபியன்ஸ் அணி அப்ரிடியின் பாக்தூன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் வெற்றியை தொடர்ந்து வங்கதேசம், கரீபிய தீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதே போல உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் துவங்கப்பட்டது.
இந்நிலையில், துபாயில் இதே பாணியில் புதிய முயற்சியாக டி10 தொடர் முதல் முறையாக நடக்கிறது. இதில் இந்திய அதிரடி மன்னன் சேவக் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த அதிரடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் மராத்தா அரேபியன்ஸ் அணி கேப்டனாக சேவக் நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். இதில் இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அதிரடி நாயகன் அப்ரிடியின் பாக்தூன்ஸ் அணியை சேவக் தலைமையிலாம மராத்தா அரேபியன்ஸ் அணி எதிர்கொண்டது.




No comments:
Post a Comment