தேர்தல் சட்டம் கடுமையாக அமுல்.! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 24 December 2017

தேர்தல் சட்டம் கடுமையாக அமுல்.!

Related image
தொகு­தி­வாரி மற்றும் விகி­தா­சார முறை­கொண்ட கலப்புத் தேர்தல் முறை­யூ­டான உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி நாடு தழு­விய ரீதியில் நடை­பெ­ற­வுள்­ளது. இரு­நூற்று எழு­பத்­தாறு பிர­தேச சபைகள், 24 மாந­கர சபைகள், நாற்­பத்­தொரு நக­ர­ச­பை­க­ளு­மாக 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­காக நடை­பெ­ற­வுள்ள அத்­தேர்­த­லி­னூ­டாக எண்­ணா­யி­ரத்து முந்நூற்று ஐம்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.
அத்­துடன் குறித்த தேர்­த­லுக்­காக நாடு தழு­விய ரீதியில் பதின்­மூன்­றா­யிரம் வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் பெரும்­பா­லான வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளி­லேயே வாக்­கெண்ணும் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. 
எனவே தேர்தல் சட்­டத்தைக் கடு­மை­யாக்கி அதனை உரிய முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கும் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. அது தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு அவ்­வா­ணைக்­குழு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது. ஆகவே தேர்தல் பிர­சார நட­வ­டிக்கை உட்­பட வாக்­க­ளிப்பு, வாக்­கெண்ணல் மற்றும் தேர்­தலை அடுத்­து­வரும் தினங்­க­ளிலும் தேர்தல் சட்­டத்­திற்கு மதிப்­ப­ளித்து நடந்­து­கொள்­ளு­மாறும் அதனை மீறி செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவ்­வா­ணைக்­குழு கேட்­டுக்­கொண்­டுள்­ளது. 
ஆகவே தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களின் போது சுவ­ரொட்­டிகள் ஒட்­டு­வ­தற்கும் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. அதனை மீறி சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­ப­டு­மாயின் ஒட்டும் தரப்­பிற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் அச்­சு­வ­ரொட்­டி­களின் மேல் மற்­று­மொரு துண்­டுப்­பி­ர­சுரம் ஒன்றை ஒட்­டு­வ­தற்கு ஆணைக்­குழு  நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அத்­துண்டுப் பிர­சு­ரத்தில் “ஒட்­டப்­பட்­டுள்ள சுவ­ரொட்­டி­யா­னது சட்­ட­வி­ரோ­த­மா­னது. தேர்தல் சட்­டங்­களை மீறும் வகையில் இது ஒட்­டப்­பட்­டுள்­ளது” என குறிப்­பி­டப்­ப­ட­வுள்­ளது.
எனினும் கட்சிக் கூட்டம் நடை­பெறும் சந்­தர்ப்­பங்­களில் மாத்­திரம் சுவ­ரொட்டி ஒட்­டு­வ­தற்கு அனு­ம­தி­யுள்­ளது. மேலும் கட்சித் தலைவர் கலந்து கொள்ளும் கூட்­டங்­களின் போது கூட்டம் நடை­பெறும் இடத்­தி­லி­ருந்து குறிப்­பி­டப்­பட்ட  எல்­லைக்­குட்­பட்ட பிர­தே­சத்தில் சுவ­ரொட்­டிகள் மற்றும் பதா­கை­களை காட்­சிப்­ப­டுத்த முடியும். எனினும் குறித்த எல்­லையை மாவட்­டத்­திற்குப் பொறுப்­பான மேல­திக தேர்தல் ஆணை­யா­ளரே தீர்­மா­னிக்க வேண்டும்.
அத்­துடன் தேர்தல் அலு­வ­ல­கங்­களை தொகு­தியில் போட்­டி­யிடும்  வேட்­பா­ளர்­களின் வீடு­களில் மாத்­திரம் அமைத்­துக்­கொள்ள முடியும். மேலும் தேர்தல் பிர­சாரம் தொடர்­பி­லான ஸ்டிகர்கள் மற்றும் கொடி­களை வேட்­பா­ளர்­களின் வாக­னங்­களில் மாத்­திரம் காட்­சிப்­ப­டுத்த முடியும். எனினும் அவ்­வா­கனம் எரி­பொருள் நிரப்­பு­வ­தற்­காக எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­க­ளுக்கு செல்­வது தவிர்ந்த ஏனைய சந்­தர்ப்­பங்­களில் குறித்த வேட்­பாளர் இல்­லாது பய­ணிக்க முடி­யாது.
இதே­வேளை இனம், மதம்,மொழி ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாது.தேர்தல் மேடை­களில் ஆற்­றப்­படும் உரை­களில் மாத்­தி­ர­மல்­லாது இணை­ய­தளம், சமூக வலைத்­த­ளங்கள் உள்­ள­டங்­க­லாக செய்­யப்­படும் பிர­சா­ரங்­க­ளிலும் குறித்த விடயம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.
மேலும் பெண் வேட்­பா­ளர்­களை நிந்­திக்கும் வகையில் மேற்­கொள்­ளப்­படும் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ரா­கவும் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அத்­துடன் தேர்தல் காலத்தில் அரச நிகழ்­வு­களில் அர­சி­யல்­வா­திகள் அர­சியல் பேசு­மி­டத்து அதனை ஊட­கங்கள் பிர­சா­ரப்­ப­டுத்­தாது தடுக்­கு­மாறு ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது. 
இதே­வேளை தேர்தல் பிர­சார காலம் புத்­தாண்டு கால­மாக இருப்­ப­தனால் புத்­தாண்டு கலண்­டர்­க­ளிலும் சிலர் சூட்­சு­ம­மான முறையில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கலாம். எனவே அவ்­வா­றான கலண்­டர்­களை தடை­செய்­வ­தற்கும் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது.
மேலும் வாக்­க­ளிப்­பிற்­காக  நாடு தழு­விய ரீதியில் பதின்­மூன்­றா­யிரம் வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. வாக்­கெண்ணும் நிலையம் தொடர்பில் மூன்று வித­மான அணு­கு­முறை பயன்படுத்தப்படவுள்ளது. பெரும்பாலும் வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்கெண்ணும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. எனினும் சகல பிரதேசங்களிலும் தபால்மூல வாக்குகள் தொகுதி மத்திய நிலையத்திலேயே எண்ணப்படவுள்ளது.  
வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களை பாதுகாக்கும் பணியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஆகவே ஒவ்வொரு  வேட்பாளர்களும் தமது இரு பிரதிநிதிகளை குறித்த பணிக்காக நியமிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages