புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிப்பாளர் சரத் ஜெயமன்ன தெரிவித்துள்ளார்.
1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டமே தற்போது நடைமுறையில் உள்ளது எனவும் இதிலுள்ள சில குறைபாடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான குறைப்பாடுகளை நீக்கி புதிய சட்ட வரைவு எதிர்வரும் இரண்டு மாதங்களுள் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment