உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பவர்கள் இன்று வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
அருகில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணி நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது.
இரண்டு கட்டங்களாக வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. முதற்கட்டத்தில் 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இரண்டாம் கட்டத்தில் 248 மன்றங்களுக்குமாக 341 உள்ளுராட்சி அமைப்புக்களுக்காக வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பு பதிவு பெப்ரவரி பத்தாம் திகதி நடைபெறவுள்ளது
No comments:
Post a Comment