நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் இராஜகிரிய மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பிலான மேற்பார்வைக்காக நேற்று சென்றபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கென நான்காயிரத்து 700 மில்லியன் ரூபா செலவிடப்படுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இராஜகிரிய மேம்பால நிர்மாணப் பணிகள் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment