வடக்கில் நிலவும் வீடமைப்புப் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்தில் தீர்வு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 24 December 2017

வடக்கில் நிலவும் வீடமைப்புப் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்தில் தீர்வு

வடக்கில் நிலவும் வீடமைப்புப் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்தில் தீர்வு
வடக்கில் நிலவும் வீடமைப்புப் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு வீடமைப்பு, அபிவிருத்தி அதிகாரசபைக்கு முக்கியமான ஆண்டாக அமையும் என்று குறிப்பிட்ட அவர் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 510 வீடமைப்புத் திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

2018 ஆம் ஆண்டில் வீடமைப்பு, அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ள பணிகள் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் 600 மாதிரிக் கிராமங்களின் பணிகளை நிறைவு செய்வதே இலக்காகும். இதற்குத் தேவையான நிதி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages