காலநிலை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 24 December 2017

காலநிலை

Image result for காலநிலை
நாட்டின் வடக்கு , கிழக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஒரளவு மழைபெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணம் , காலி ,மாத்தறை ,நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளைகளில் பனிமூட்டமான காலநிலை காணப்படும். கிழக்கு கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages