தெய்­வீ­கத்­தன்­மையும் மனி­தா­பி­மா­னமும் சந்­தித்­துக்­கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்வு.! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 25 December 2017

தெய்­வீ­கத்­தன்­மையும் மனி­தா­பி­மா­னமும் சந்­தித்­துக்­கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்வு.!

Image result for NATHTHAR MAITHRIPALA SIRISENA
தெய்­வீ­கத்­தன்­மையும் மனி­தா­பி­மா­னமும் சந்­தித்­துக்­கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்­வாக அன்று முதல் இன்று வரை நத்தார் பண்­டிகை மானிட வர­லாற்றில் முக்­கிய பங்­கினை வகித்து வரு­கின்­றது என்று  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள நத்தார் வாழ்த்து செய்­தியில்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  
அந்த செய்­தியில்  மேலும்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,  
கோலா­க­ல­மான உலக பண்­டி­கை­யான நத்தார் கொண்­டாட்­டங்­க­ளுடன் இணைந்து அதனைக் கொண்­டாடும் நம் நாட்டின் கிறிஸ்­தவ சகோ­த­ரர்­க­ளுக்கு எனது நத்தார் வாழ்த்­து­களைத் தெரி­வித்துக் கொள்­வதில் மகிழ்ச்சி அடை­கின்றேன்.
தெய்­வீ­கத்­தன்­மையும் மனி­தா­பி­மா­னமும் சந்­தித்­துக்­கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்­வாக அன்று முதல் இன்று வரை நத்தார் பண்­டிகை மானிட வர­லாற்றில் முக்­கிய பங்­கினை வகித்து வரு­கின்­றது. 
விவே­கமும் சமத்­து­வமும் அற்ற  குரூ­ரத்­தனம் வேரூண்­டி­யி­ருந்த காலப்­ப­கு­தி­யி­லேயே இயேசு பிரான் இந்த பூமியில் அவ­த­ரித்தார். அவர் தெய்­வீக வரம் பெற்­ற­வ­ராக இந்த பூமியில் பிறந்­தி­ருந்­த­போ­தி­லும்இ சமூ­கத்தின் தீமை­யினை நீக்­கு­வ­தற்­கான வழி­காட்­டு­தலை ஒரு சாதா­ரண மனிதர் தமது வாழ்வில் எதிர்­நோக்க நேரிடும் அனைத்து இடை­யூ­று­க­ளையும் அனு­ப­வித்­த­வாறே அவர் உலக மக்­க­ளுக்கு வழங்­கினார். இத­னா­லேயே மனி­தா­பி­மா­னத்தின் ஆழத்­தையும் அதில் இருக்­க­வேண்­டிய முன்­மா­தி­ரி­யான குணங்­க­ளையும் உலக மக்கள் சரி­யாக இனங்­கண்டு கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது.
தற்­கால உல­க­மக்கள் எதிர்­நோக்­கி­யி­ருக்கும் பாரிய சவால்­க­ளுக்­கான தீர்­வு­களைக் காண்­ப­தற்­கான வழி­மு­றையும் அதனுள் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அதா­வது மனி­த­நே­யத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எல்­லா­வி­த­மான பிரச்­சி­னை­க­ளுக்கும் விடை காண­மு­டியும் என்­பதே அங்கு தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 
ஏனை­ய­வர்­களின் மீது காட்டும் இரக்கம்  கருணை ஆகி­யன தமக்கு வெற்­றியைத் தரு­வ­துடன்  ஒட்­டு­மொத்த மனித வர்க்­கத்­தையே சக­வாழ்வை நோக்கி இட்­டுச்­செல்லும் என்­பதும் தெளி­வா­கின்­றது. மனி­த­நே­யத்­திற்கு எதி­ராக எழுந்து நிற்கும் சகல ஆயு­தங்­க­ளையும் மெள­னிக்கச் செய்து  அமை­தியின் பாதையில் எதிர்­கா­லத்தைப் பிர­கா­ச­ம­டையச் செய்ய இத்­த­கைய பயண பாதையில் பய­ணிப்­பதன் மூலமே இய­லு­மா­ன­தாக அமையும்.
இத்­த­கைய மகத்தான சிந்தனையை நிஜமாக்கும் தேவாலயத்தின் அந்த இனிமையான மணியோசையானதுஇ இந்த நத்தார் காலத்தில் உலகமெங்கும் எதிரொலிக்கட்டுமாக. 
உலகவாழ் சகல கிறிஸ்தவ மக்களுக்கும் அமைதியும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages