தமது நாடு முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்ச்சன் Bryce Hutchesson
தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார ரீதியில் முன்நோக்கிப் பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு;ள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு இலங்கைக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்து மா சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் நெருக்கமான புரிந்துணர்வு தற்பொழுது நிலவி வருகின்றது. வர்த்தக வாய்ப்பு, தொழில் வாய்ப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.



No comments:
Post a Comment