இலங்கையின் 70ஆவது தேசிய சுதந்திர தின வைபவத்தை 118 நாடுகளில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள்; அமைச்சின் ஊடாக வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுரக அலுவலகங்கள் மற்றும் நாடுகளிலுள்ள இலங்கையர்களின் அமைப்புக்கள் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்நாட்டலுவல்கள்; அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் இலங்கையில் நடைபெறவுள்ள 70ஆவது சுதந்திர தினத்த வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment