இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடெங்கிலும் மழையுடனும், மேகமூட்டத்துடனும் கூடிய காலநிலை நிலவும்.
காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 5.30 இற்கு விடுத்துள்ள அறிக்கையில் இதுதொடபாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் அனேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்
விசேடமாக கிழக்கு - ஊவா மாகாணங்களிலும், மாத்தளை - பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் அடைமழை பெய்யலாம். நாட்டின் வடபாகத்திலும், அம்பாந்தோட்டை- மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment