'செவன' அலுவலகத் திட்டம் 2020ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 'கிராம இராஜ்ய' எண்ணக்கருவிற்கமைய, நாடு முழுவதிலுமுள்ள சுமார் 14 ஆயிரம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட உள்ள உத்தியோகபூர்வ 'செவன' அலுவலகத் திட்டம் 2020ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படும்.
இதன் மூலம் அனைத்து அரச அதிகாரிகளும் ஒரே கூரையின் கீழ் பொதுமக்களுக்குச் சேவையாற்றும் சந்தர்ப்பம் ஏற்படுமென்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment