அரசாங்கத்தின் வெற்றிகரமான நிதிக்கொள்கையின் காரணமாக 63 வருடங்களின் பின்னர் அரசாங்கத்தின் நிதி முதன்மை கணக்கில் மேலதிகமாக தொகை இருப்பதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைவாக அரசாங்கத்தின் வெற்றிகரமான வருமான செலவு முகாமைத்துவத்தின் காரணமாக 63 வருடங்களுக்கு பின்னர் வரவுசெலவுத்திட்டத்தில் அரசநிதி முதன்மை சமநிலை 21.9 பில்லியன் ரூபா மேலதிகமாக பதிவாகியுள்ளது.
1954ஆம் ஆண்டிலேயே சுதந்திர இலங்கையில் முதன்முறையாக வரவுசெலவுத்திட்டத்தில் நிதி முதன்மை சுட்டிக்காட்டப்பட்டது. மொத்த தேசிய உற்பத்தியில் இது 0.5 சதவீதமாகும். பின்னர் 1956ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 2.2 சதவீதமாக வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிக தொகையாக காணப்பட்டது.
No comments:
Post a Comment