செல்லமாக வளர்த்த வெள்ளை எலி இறந்ததால் சிறுமி தற்கொலை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 7 January 2018

செல்லமாக வளர்த்த வெள்ளை எலி இறந்ததால் சிறுமி தற்கொலை

செல்லமாக வளர்த்த வெள்ளை எலி இறந்த வேதனையில் சிறுமி துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Image result for வெள்ளை எலி

போபால்:
மத்தியபிரதேச மாநிலம் அயோத்யா நகர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி திவ்யான்ஷி ரத்தோர். 7-ம் வகுப்பு படித்து வந்தாள். அவளுக்கு கடந்த வாரம் செல்லப்பிராணியான ஒரு வெள்ளை எலி கிடைத்தது. அதனை அவள் மிகவும் ஆர்வத்துடன் வளர்த்து வந்தாள். அந்த வெள்ளை எலி நேற்று முன்தினம் இறந்து விட்டது. இதனால் திவ்யான்ஷி மனவேதனை அடைந்தாள். அந்த எலியின் உடலை தோட்டத்தில் புதைத்தாள். நேற்று எலியை புதைத்த இடத்தில் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினாள்.

பின்னர் வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டாள். சிறிது நேரத்தில் அவளது தாய் குரல் கொடுத்தும் கதவை திறக்கவில்லை. இதனால் அவர் பக்கத்து வீட்டினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது திவ்யான்ஷி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவள் செல்லமாக வளர்த்த வெள்ளை எலி இறந்த வேதனையில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாள்.


ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமி வளர்த்த நாய் செத்துப்போனது. அப்போதும் அவள் இதேபோல மிகவும் மனவேதனை அடைந்ததாக குடும்பத்தினர் கூறினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages