இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சமூக அபிவிருத்திக்கான தகவல் தொழில்நுட்ப உடன்படிக்கை கைச்சாத்து - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 16 January 2018

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சமூக அபிவிருத்திக்கான தகவல் தொழில்நுட்ப உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சமூக அபிவிருத்திக்கான தகவல் தொழில்நுட்ப உடன்படிக்கை கைச்சாத்து
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சமூக அபிவிருத்திக்கான தகவல் தொழில்நுட்ப உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
 
இலங்கைக்கு விஜயம்செய்துள்ள இந்திய  தகவல் தொழில்நுட்பத் துறைஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இதன் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
 
 
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இலங்கையில் சமகால அரசாங்கத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்திய அமைச்சர் பாராட்டிப் பேசினார்.
 
 
சமூக அபிவிருத்திக்காக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதம் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. இருதரப்பு தகவல் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages