தெற்கு கடலில் பாரிய கப்பலுடன் மீன் பிடிப்படகு மோதி விபத்து : இருவர் பலி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 10 January 2018

தெற்கு கடலில் பாரிய கப்பலுடன் மீன் பிடிப்படகு மோதி விபத்து : இருவர் பலி

தெய்வேந்திரமுனைக் கடற்பரப்பில் வாகனங்களை ஏற்றிச் சென்ற பாரிய கப்பலொன்றுடன் மீனவப்படகொன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமற்போயுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Related image
நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமற்போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
குறித்த மீனவப் படகில் 6 பேர் பயணித்துள் நிலையில் ஏனைய மூவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
காணாமற்போன மீனவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையின் இரண்டு டோரா படகுகள் பயன்டுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கமான்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.
தெய்வேந்திரமுனைக் கடற்பரப்பில் இருந்து 13 கடல்மைல் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனங்களை ஏற்றிவந்த குறித்த கப்பல் சென்னையில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதுடன், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணித்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages