முல்லைத்தீவு கடல் பிரதேசத்தில் வழமையாக மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக முல்லைத்தீவில் உள்ள கடற்தொழில் அதிகாரி தெரிவித்தார்.
கடலில் ஏற்பட்டதாக கூறப்படும் மாற்றத்தின் காரணமாக கடல் தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் கேட்டபோதே குறித்த அதிகாரி எமது செய்திப்பிரிவிற்கு இதுதொடர்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் வழமைக்கு மாறான மாற்றம் எதுவும் நிகழவில்லை என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment