பெங்களூருவில் பணத்தகராறு காரணமாக பெண் ஒருவர் படுகொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு ஜேசிநகரைச் சேர்ந்தவர் 40 வயது தாராபிரபு இவரது கணவர் பிரபு. இவர் சிறிய அளவில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில் தாரா தனது தாயார் வசிக்கும் பகுதியான கமர்சியல் தெரு அருகே உள்ள சங்கம் வீதியில் உள்ள வீட்டுக்கு வந்து இருந்தார்.
இந்த நிலையில் ஒரமாவை சேர்ந்த கோபிநாத் என்பவர் சங்கம் தெருவில் தனியே இருந்த தாராவிடம் அவர் திருப்பிக் கொடுத்த ரூ. 11 லட்சம் ரூபாயை தனக்கு மீண்டும் கொடுத்திட தாராவிடம் வலியுறுத்தினார்.
ஆனால் தாரா இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் வாக்குவாதம் முற்றி கோபிநாத் தாராவை படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இந்த நிலையில் வெளியூர் சென்ற தாராவின் தாயார் சரளா வீட்டுக்கு நாட்கள் கழித்து வந்த பின்னர் தாரா கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் உடனடியாக சரளா போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையில் கோபிநாத் தாராவை கொலை செய்து இருப்பது உறுதியானதை தொடர்ந்து போலீசார் கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment