விழிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ண ஒருநாள் போட்டித்தொடர் இன்று ஆரம்பம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 9 January 2018

விழிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ண ஒருநாள் போட்டித்தொடர் இன்று ஆரம்பம்

Related image


விழிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
டுபாயில் ஆரம்பமாகும் இப்போட்டித்தொடர் எதிர்வரும் 21ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன.

இதில் இலங்கை சார்பாக 16 வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். சந்தன தேஷப்பிரிய தலைவராகவும் ,தினேஸ் மத்துகம உப தலைவராகவும் செயற்பட உள்ளனர். லக்ஷான் தேவப்பிரிய பயிற்றுவிப்பாளராக பணியாற்றுகின்றார்.

இலங்கை முதல் சுற்றில் 5 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. முதலாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெறும். இலங்கை விழிப்புலனற்றோர் கிரிக்கெட் அணி குறித்த போட்டியில் பங்குபற்றுவதற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages