ஜனாதிபதி, பிரதமருக்கிடையிலான பனிப்போர் ஆரம்பம்.! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 16 January 2018

ஜனாதிபதி, பிரதமருக்கிடையிலான பனிப்போர் ஆரம்பம்.!

ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் இடம்­பெற்­று­வரும் நீண்­ட­கால பனிப்போர் தேர்தல் பெறு­பே­று­க­ளுடன் வெடிக்க ஆரம்­பிக்கும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.
சோசலிச மக்கள் முன்­னணி நேற்று கொழும் பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கையி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 
Image result for வாசு­தேவ நாண­யக்­கார virakesari
அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், அர­சாங்­கத்­துக்குள் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்­கி­டையில் நீண்ட கால­மாக அதி­கார பனிப்போர் இடம்­பெற்று வரு­கின்­றது. பிர­தமர், ஜனா­தி­ப­தியை முந்­திக்­கொண்டு அர­சாங்­கத்தின் பிர­தான அதி­கா­ர­மு­டை­ய­வ­ராக செயற்­பட முயற்­சிக்­கின்றார். அதே­போன்று ஜனா­தி­ப­தியும் பிர­த­மரை முந்­திக்­கொண்டு அர­சாங்­கத்தின் அதி­கா­ரங்­களை செயற்­ப­டுத்த முயற்­சிக்­கிறார். இதன் பிர­காரம் பிர­தமர் பாரா­ளு­மன்­றத்­தி­னூ­டாக அர­சாங்­கத்தின் சில அதி­கா­ரங்­களை தனக்கு கீழ் கொண்­டு­வந்­துள்ளார்.
ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்­கி­டையில் இடம்­பெற்­று­வரும் இந்த பனிப்­போ­ரா­னது நீண்ட காலம் செல்­வ­தற்கு முன்னர் வெடிக்க ஆரம்­பிக்கும். இதற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது எமது கட­மை­யாகும். இதன்­மூலம் இந்த அர­சாங்­கத்தை வீழ்த்தும் போராட்டம் வெளிப்­படும். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் அர­சாங்­கத்தில் இருக்கும் அனைத்து கட்­சி­க­ளுக்கும் பாரி­ய­தொரு தோல்வி ஏற்­ப­டு­வது உறு­தி­யாகும். இதனால் நாட்­டுக்குள் பாரிய அர­சியல் குழப்பம் ஏற்­ப­டு­வது யதார்த்­த­மாகும்.
 மக்­களின் ஆணை­யில்­லாத அர­சாங்கம் என்ற போராட்­டத்தை மக்கள் நாடு­பூ­ரா­கவும் மேற்­கொள்­வதை தவிர்க்க முடி­யா­மல்­போகும். இதன்­மூலம் இந்த அர­சாங்கம் வீட்­டுக்கு செல்லும் நிலை ஏற்­படும். ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு இடையில் இடம்­பெறும் அதி­கார போராட்­டமும் இதற்கு வாய்ப்­பாக இருக்­கின்­றது. இந்த அதி­கார போராட்­டத்தின் மற்­று­மொரு அங்­க­மா­கவே ஜனா­தி­பதி தனது பத­விக்­காலம் தொடர்பில் உயர் நீதி­மன்றில் வின­வி­யது.
ஜனா­தி­பதி தனக்கு 6 வரு­டங்கள் பத­வியில் இருக்­கலாமா என்­றுதான் உயர் நீதி­மன்றில் கேட்­டி­ருந்தார். ஜனா­தி­ப­திக்கு இதனை 6 வரு­ட­ங்களாக்கும் தேவை இருந்­தது. அதே­போன்று பிர­த­ம­ருக்கு இதனை 5வரு­டத்­துக்கு வரை­ய­றுக்க தேவை­யாக இருந்­தது. ஏனெனில் ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் 6 வருடங்கள் என தீர்ப்­பானால் பாரா­ளு­மன்ற தேர்தல் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் நடத்­தப்­பட வேண்டும். ஜனா­தி­ப­தியின் காலம் 5 வருடங்கள் என தீர்ப்­பானால் ஆரம்­ப­மாக ஜனா­தி­பதி தேர்­தலே நடத்­தப்­பட வேண்டும். இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு முன்னர் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்தி ஜனா­தி­ப­தியை பிரச்­சி­னைக்கு உட்­ப­டுத்த வேண்­டிய தேவை  பிர­த­ம­ருக்கு இருந்­தது. அதற்கு முன்னர் பாரா­ளு­மன்ற தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்ற தேவை ஜனாதிபதிக்கு இருந்தது. இந்நிலையிலேயே உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தில் 5 வரு டங்களே பதவி வகிக்கலாம் என தெரிவித்துள் ளது. இதனால் அரசாங்கத்துக்குள் எதிர்வரும் தினங்களில் மேலும் அதிகாரப் போராட்டம் வலுவடையும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages