நேரம் வரும்போது களமிறக்குவோம் என்கிறார் கெஹெலிய - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 16 January 2018

நேரம் வரும்போது களமிறக்குவோம் என்கிறார் கெஹெலிய

எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டின் இறு­திப்­ப­கு­தியில் அறி­விக்­கப்­ப­ட­வுள்ள ஜனா­தி­பதி   தேர்­த­லுக்கு கூட்டு எதி­ரணி தயா­ரா­கவே இருக்­கின்­றது.  வெற்­றி­பெறும்  ஜனா­தி­பதி வேட்­பா­ளரை  கள­மி­றக்­கு­வ­தற்கு  நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். 
ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பத­விக்­காலம் ஐந்து வரு­டங்கள் மட்­டு­மே­யாகும் என்று   உயர்­நீ­தி­மன்­றத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர்  ரம்­புக்­வெல மேற்­கண்­ட­வாறு கூறினார்.  அவர்  இது தொடர்பில்  மேலும் குறிப்­பி­டு­கையில், 
Image result for கெஹெலிய
உயர்­நீ­தி­மன்­றத்தின்  அபிப்­பி­ரா­யத்தின் பிர­காரம் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான அறி­விப்பு 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகு­தியில் விடுக்­கப்­ப­ட­வேண் டும். 
அதன்­படி   நாங்கள்    எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயா­ரா­கி­விட்டோம்.    அதா­வது வெற்­றி­பெ­றக்­கூ­டிய   ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நிறுத்­து­வ­தற்கு   நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம்.     குறிப்­பாக சிங்­கள மற்றும்  தமிழ் மக்­க­ளி­னதும்    ஆத­ரவைப் பெறக்­கூ­டிய  வேட்­பா­ளரை கள­மி­றக்­குவோம்.  
நாங்கள் ஏற்­க­னவே ஜனா­தி­பதி வேட்­பா­ளரை  தீர்­மா­னித்­து­விட்டோம்.  அவரை  நேரம் வரும்போது களமிறக்குவோம்.     அதாவது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை நாங்கள் களமிறக்குவோம் என்றார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages