காலநிலை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 9 February 2018

காலநிலை

காலநிலை

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு ,மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு ,சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவக்கூடும்.

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரையோர பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழமான கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு மழைபெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages