- Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 26 December 2017

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2017 இன்றுடன் 13 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூறும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.
இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.
ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில்  ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும் இதில் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages