தேயிலை தோட்ட சம்பளப்பணம் கொள்ளையா.? - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 26 December 2017

தேயிலை தோட்ட சம்பளப்பணம் கொள்ளையா.?

Related image
தேயி­லைத்­தோட்ட  உரி­மை­யாளரின்  வீட்டுக்குள் புகுந்து சம்­பளப் பணத்தை கொள்­ளை­யிட்ட  முன்னாள்  இராணுவ வீரர் ஒருவர்  உட்­பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்களை  கம்­பளை மாவட்ட நீதிமன்ற நீதி வான் சாந்தினி மீகொட முன்னிலையில் ஆஜர்ப­டுத்­திய போது  எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறு நீதி வான் உத்­த­ர ­விட்­டுள்ளார். இச்­ சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­ வ­ரு­வ­தா­வது,
 நாவ­லப்­பிட்­டி  தொளஸ்­பாகை பிர­தே­ச­த்தைச்­சேர்ந்த சந்­தேக நபர்­களில் மூவர் கொழும்பில் நிறு­வ­ன­மொன்றில் வேலை செய்­து­ வந்­துள்­ளனர் .
இந்  நிலையில்   மேற்­கு­றிப்­பிட்ட தோட்­டத்தில் முன்னர் கட­மை­யாற்றி   வேலை­யி­லி­ருந்து  இடை நிறுத்­தப்­பட்­டி­ருந்த நான்­கா­வது சந்­தேக நபரும் குறித்த நிறு­வ­னத்தில் புதி­தாக வேலைக்கு சேர்ந்­துள்­ளார்.
இந் நிலையில் அங்கு அறி­மு­க­மா­கிய புதிய நண்­ப­ருடன் சேர்ந்து தீட்­டிய திட்­டத்தின் படி  கடந்த 9 ஆம் திகதி குறித்த தோட்­டத்தில் வேலை செய்யும் தொழி­லா­ளர்­க­ளுக்கு  வழங்­கு­வ­தற்­கென கொண்டு வரப்­படும்  பணத்தை தோட்ட உரி­மை­யா­ளரின் வீட்­டுக்குள்  புகுந்து  பணத்தை    கொள்­ளை­யி­டு­வ­தென    திட்டம்   தீட்­டிய பொழுதும் ஒரே நாளில்  நால்வ­ருக்கும் நிறு­வ­னத்தால் விடு­முறை வழங்­கப்­ப­டா­மை
யால் குறித்த திட்­டத்­தினை பிறிதொரு தினத்­திற்கு மாற்­றி­கொண்­ட­தா­கவும் பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரியவந்­துள்­ளது.
இதற்­க­மைய கடந்த வாரம் விடு­மு­றையில் ஊருக்கு வந்த சந்­தேக நபர்கள் குறித்த தோட்ட உரி­மை­யா­ளரின் வீட்­டுக்குள் புகுந்து அங்­கி­ருந்த இரும்பு பெட்­டியை திருடி முச்­சக்­கர வண்­டியில் ஏற்­றிக் ­கொண்­டு சென்று கெலி குறூப் என்ற பிர­தே­சத்
தில் அமைந்­துள்ள காட்­டுக்குள் வைத்து  உடைத்து அதி­லி­ருந்த 2 இலட்­சத்து 54 ஆயி ரம் ரூபாய் பணத்­தினை கொள்­ளை­யிட்டு தலை­ம­றை­வாக இருந்து வந்­தனர்.
இந்­ நி­லையில் குறித்த சம்­பவம் தொடர்­பாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வந்தகறுவாத்தோட்ட பொலிஸார் கடந்த வியாழக்கிழமை  குறித்த சந்தேக நபர்களை கைதுசெய்து விசாரணையின் பின்னர் வெள்ளி க்கிழமை  கம்பளை மாவட்ட நீதி மன்றில் ஆஜர்படுத்திய போதே  நீதிவான் மேற் கண்ட உத்தரவினை பிறப்பித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages