ஜார்க்கண்ட்: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பலி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 15 January 2018

ஜார்க்கண்ட்: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 
Related image

ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் அமைந்துள்ள பார்னோ பிளாக் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நேற்று இரவு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். பல்மாதிபா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து அறிந்த மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ், விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages