புதுடெல்லி: நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியுடனான பிரிமியர் பேட்மின்டன் லீக் போட்டியில், அவாதே வாரியர்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் போராடி வென்றது. டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய அவாதே வாரியர்ஸ் வீராங்கனை சாய்னா நெஹ்வால் 6-15, 15-13, 15-13 என்ற செட் கணக்கில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சின் எம் லீயை வீழ்த்தினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அவாதே வாரியர்ஸ் வீரர் பாருபள்ளி காஷ்யப் 15-9, 15-12 என்ற நேர் செட்களில் நார்த் ஈஸ்டர்ன் வீரர் அஜய் ஜெயராமை எளிதாக வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் அவாதே வாரியர்சின் பெடர்சன் - டி.சி.மான் ஜோடி வெற்றியை வசப்படுத்தியது.
Post Top Ad
Saturday 6 January 2018
போராடி வென்றது அவாதே வாரியர்ஸ்
Tags
# foreign News
# Sports
Share This
About www.gafsrilanka.com
Sports
Labels:
foreign News,
Sports
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment