ரயில்வே பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
ரயில்வே பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது
சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்களை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரயில் சாரதிகளுடனும், கட்டுப்பாட்டாளர்களுடனும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த சாரதிகள் எதிர்ப்பு தெரிவித்தமையினால் கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பணிப்புறக்கணிப்பின் காரணமாக, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை ஆரம்பமாகவிருந்த 9 ரயில்வே சேவைகள் ரத்துச் செய்யப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment