குழந்தை " பிறந்த கதை. - விமல் குழந்தை வேலு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 26 July 2018

குழந்தை " பிறந்த கதை. - விமல் குழந்தை வேலு

" குழந்தை " பிறந்த கதை. 
===============

நீண்ட காலமாக குழந்தை பாக்கியமே கிடைத்திராத இரண்டு பெண்கள்  ஒரு சாமியாரை சந்தித்து தங்கள் குறை தீர்க்க நிவர்த்தி வேண்டி கண்ணீர் விட்டுக் கேட்டுக் கொண்டதின் பெயரில் சாமியாரிடமிருந்து கிடைத்த தாயத்தின் மூலமாக இரு பெண்களுமே கர்ப்பமாகிவிட்டார்கள். 

குழந்தை பிறப்பதற்கு ஒரு மாசம் இருக்கும் போது  திடீரென ஒரு நாள் இரு பெண்களும் பதறியடித்துக்கொண்டு சாமியாரிடம் ஓடிவருகிறார்கள் . இவர்களின் பதட்டத்தை கண்டும் பதட்டப்படாத சாமியார் கேட்கிறார். 

" குழந்தாய்காள் ஏனிந்த பதட்டம் ? என்ன விசயம்? "

" சுவாமி நாங்கள் இருவரும் மிகவும் சங்கடமான மன நிலையில் இருக்கிறோம் , நீங்கள்தான் அதை தீர்த்து வைக்கவேண்டும் "

" என்ன சங்கடம் . குழந்தை வேண்டுமென்று வேண்டி வந்தீர்கள் , தந்தேன். இப்போது என்ன .  குழந்தையின் ஷேமத்துக்கு தீர்த்த நீர் வேண்டுமா ? வேண்டுமென்றால் சொல்லுங்கள் தருகிறேன்"

 " ஐய்யய்யோ .  நீங்கள் ஒரு தடவை தந்த தீர்த்தமே போதும் சுவாமி . இது வேறு சங்கடம்"

"சரி சொல்லுங்கள் நிவர்த்திக்கு முயற்சிக்கிறேன்"

"அது .  வந்து  வந்து . அது .  . சுவாமி நீண்ட காலமாக குழந்தை பாக்யமே இல்லாத நாங்கள் உங்கள் மகிமையால் அந்த பாக்யதையை பெற்றோமல்லவா ?"

"ஆமாம் அதற்கென்ன இப்போது" 
"சுவாமி . இப்போது தான் அறிந்தோம்  . அந்த குழந்தை கருவிலேயே இடம் மாறி வளர்கிறதென்பதை , இதற்கு நிவர்த்தியே இல்லையா சுவாமி ?" 

"என்னது கருவிலேயே இடம்மாறி வளர்கிறதா ?புரிய வில்லையே ?"
"ஆமாம் சுவாமி "
"எப்படி . ?எதனடிப்படையில் இப்படி கூறுகிறீர்கள் பெண்காள்?"

"ஆதாரத்தோடுதான் சொல்கிறோம் சுவாமி , எனது குழந்தை இவள் வயிற்றிலும் , இவள் குழந்தை என் வயிற்றிலுமே வளர்கிறது சுவாமி "
"என்னது வயிறு மாறி கரு வளர்கிறதா ,? " 
"ஆமாம் . எனது குழந்தை அவள் வயிற்றில் அவள் குழந்தை என் வயிற்றில் வளர்வது உண்மையே சுவாமி"

" அப்படி நடப்பது சாத்தியமற்றதே . அப்படி இதுவரை உலகத்தில் நடந்ததாக வரலாறு கூட இல்லையே . . எந்த அடிப்படையில் இந்த கூற்றை கூறுகிறீர்கள்?"

"நாங்கள் கூறுவது உண்மையே சுவாமி நம்புங்கள் எங்களை"  
"சுவாமி உங்களின் தாயத்தின் மகிமையால்தான் நாங்கள் கர்ப்பமாவோம் என்று நீங்கள் சொன்னீர்கள்?"

"ஆமாம் . இப்போதும் சொல்கிறேன் அப்படித்தான் , அதில் ஏதும் சந்தேகமா ? "

"இல்லை சுவாமி இல்லை . நேற்றுத்தான் கவனித்தேன் . எனது தாயத்தில் இவளின் பெயர் இருந்தது, ஓடிப் போய் அவளிடம் கேட்டேன் , அவளின் தாயத்தில் எனது பெயர் இருப்பதாகவே அவளும் சொல்கிறாள் , அப்படியாயின் எங்கள் குழந்தைகள் வயிறு மாறித்தானே வளர்கிறது ?"

"ஓஹ் .  இதுதானா பிரச்சினை . . அன்று இருளில் இடுப்பு மாறி கட்டி விட்டேன் , வேண்டுமென்றால் இன்றே மாற்றி கட்டிவிடட்டுமா ?"

"என்னது திரும்பவுமா? வேண்டாம் சுவாமி  , இதற்கு வேறொரு பரிகாரமும் இல்லையா?"

சாமியார் பலமணி நேர சிந்தனக்கு பின்பு ஒரு முடிவுக்கு வருகிறார். 
"பெண்காள் . நடந்தது நடந்ததுதான்   , நான் சொல்வது போல் நடப்பதே அதற்கான பரிகாரம் "  
"  இந்த துண்டு சீட்டில் எனக்கு விரும்பிய இரண்டு பெயர்கள் எழுதியிருக்கிறேன் , குழந்தை பிறந்ததும் பிரித்து பார்த்து நீங்கள்  வைக்கும் பெயரில் பாதி பெயராக நான் குறிப்பிட்டிருக்கும் இந்த பெயரையும் சேர்த்து சூட்டி விடுங்கள் "
"இதில் என்ன விஷேடமுண்டு சுவாமி"?
"ஆமாம் இது விஷேட குழந்தையாக . , உலகத்தில் யாருக்குமே இல்லாத பெயருள்ள குழந்தையாக, ஒரே நாளில் ஊரே திரும்பிப்பார்க்கும் குழந்தையாக  திகழ்வான்"

சொன்ன சாமியார் அப்போதுதான் கவனித்தார், இரு பெண்களில் ஒருத்தி ஒரு குழந்தையோடும் வந்திருந்தாள். சாமியாருக்கு கோவமும் , ஆச்சரியமும் கூடிற்று. 

"குழந்தையே இல்லையென்றுதானே என்னிடம் வந்தீர்கள் . . இது யாருடைய குழந்தை?"

"இது இவள்ற குழந்தைதான் சாமி மன்னிக்க வேண்டும் "

"ஏன் என்னிடம் பொய்  கூறி ஏமாற்றினீர்கள்?"

"இல்ல சாமி நீங்கள்தான் சொன்னீங்க ஒரு தாயத்துக்குக்கு  இன்னொரு தாயத்து free என்று , இவள்  பக்கத்து வீட்டுக்காரி , வீட்டுல சும்மாதானே இருக்கிறாய்  சாமியார் ஒண்டுக்கு ஒண்டு சும்மா தாயத்து குடுக்காராம் வாறியாடி என்று கேட்டன் வந்திட்டாள் "

சாமியாருக்கு மேலும் கோவம் தலைக்கேறிட்டுது. 

"இது ஏமாற்று வேலை , இதற்கான பலனையும் நீங்கள் ஏற்கவே வேண்டும் , சொல்கிறேன் கேளுங்கள்"
"என்ன சுவாமி?"
"எந்த பெயருடைய குழந்தை ஒரே நாளில் பெயர் வாங்குமோ அதே பெயரால் மற்றய குழந்தை காலம் பூராவும் கவலை கொள்வான் . , இதுவே எனது சாபம் "

"சுவாமி இதற்கு மாற்று வழியே இல்லையா?" 

"இல்லை இதுவே இறுதி வழி போய்விடுங்கள்"

சாமியாரின் பேச்சை நம்பிய இரு பெண்களும்  , சந்தோஷத்துடனும் துக்கத்துடனும்  துண்டு சீட்டோடு வந்து விட்டார்கள்.
உரிய காலத்தில் குழந்தைகளும் பிறந்து சுவாமியின் துண்டு சீட்டு பெயர்களையும் சூடிக்கொண்டனர் .  
பெரியவர்களுமாகி விட்டார்கள். திடீரென ஒரு நாள் அவர்களில் ஒருவன் செய்த புத்திசாலித்தனத்தால் ஊரே அவனை 
திருப்பிப்பார்த்தது . . 

ஊரே திரம்பிப்பார்த்த .  தாயத்துக்குக்கு  பிறந்த அந்த குழந்தையின் பெயர்தான் #முகம்மட் கந்தசாமி. #

#கதைசொல்லியிடமாடாகதைவிடுற#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages